வியாழன், 9 செப்டம்பர், 2010

மக்கள் ஊடகம்



மக்கள் ஊடகம் என்பது, பெருமளவு மக்களைச்
சென்றடைவதற்காக வடிவமைக்கப்படும் 
ஊடகத்துறையின் ஒரு பிரிவைக் குறிக்கும்.

நாடு தழுவிய வானொலிச் சேவைகள்,
செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்பவற்றின்
அறிமுகத்தோடு 1920களில் மக்கள் ஊடகம்
என்னும் கருத்துரு பயன்படத் தொடங்கியது...


மக்கள் ஊடகங்கள் என்று சொல்லத்தக்க
புத்தகங்கள் போன்றவை இக் கருத்துரு
உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள்
முன்பே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது...

தற்காலத்தில் இணைய ஊடகங்களூடாகத்
தனிப்பட்டவர்களும், மக்கள் ஊடகத்
தயாரிப்பாளர்களோடு ஒப்பிடக்கூடிய
அளவுக்கு, மக்களைச் சென்றடையும்
வசதிகள் இருப்பதனால் மக்கள் ஊடகம்
என்னும் கருத்துரு சிக்கலடைய
தொடக்கி உள்ளது...

ஊடகங்கள் மீதான ஓர் பார்வை


ஊடகங்கள் மிதான பொது மக்களின் நம்பிக்கையின்
அளவை மதிப்பிடுவது கடினமாகும். மதிப்பீடுகள்
எப்போதும் கற்பனையின் அடிப்படையிலானவை
அல்லது போதிய தரவுகள் அடிப்படையில்
அமையதவை ஆகும்.

இதற்கு புறம்பாக குறிப்பாக ஊடகங்கள் பலம்வாய்ந்த மற்றும் ஜனரஞ்சகமான நபர்களை பற்றியோ பேசும் போது அவற்றின் மீதான நம்பிக்கைகள் குறைந்து வருவதை கணிப்பீடுகள் கட்டுகின்றன.

ஆகவே ஊடகங்கள் நம்பகமான தகவல்ல்கலையே வழங்க வேண்டும். குறிப்பாக பொது மக்களின் நம்பிக்கையை வளர்பதர்த்கான சந்தர்பங்களை சமூக அடிப்படையிலான ஊடகங்கள் வழங்குகின்றன.

உதாரணமாக சமூக ஒலி/ஒளி பரப்புக்கான ஆணையை மதிப்பீடு செய்வதிலும் புதுப்பிபதிலும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கலாம் வளங்கள் இடமளிகுமையின் ஊடகங்கள் நிறுவனங்கள் தமது சொந்த நேயர் ஆராட்சியில் ஈடுபடலாம் உண்மையிலேயே ஊடகவியல் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உயர்த்தும்.

ஊடகமும் சமூகமும்



ஊடகவியலாளர்கள் சமூகத்தை அறிவூட்டுவது கடமையாகும்
ஊடகவியலாளர் தொழில் வாண்மை,ஒழுக்க நெறி மற்றும்
துணிச்சல் ஆகியன அவர்கள் பணிபுரியும் ஊடக கலாச்சாரத்திற்கு
அமையவே தீர்மானிக்கபடுகிறது இன ரீதியாகவும் அரசியல்
ரீதியாகவும் மயப்படுத்தப்பட்ட சமூகத்தில் இலங்கையில் உள்ள
ஊடகவியலாளர்கள் வாழ்கின்றனர்.

அனைவருக்கும் பணியாற்ற கூடிய வகையில் ஊடக துறையின்
பெறுமானங்களை மேம்படுத்தி பொது மக்களுக்கு சேவையாற்ற
கூடிய பெறுமானங்களை தன்னகத்தே உடைய ஊடகத்துறையை
தோற்றுவிப்பதே ஊடகவியலாளனின் கடமையாகும்.

ஊடகவியலாளர் சமூக பணியை மேற்கொள்வது மிக கடினமான
விடையமாகும் இப்பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமையின்
இதனோடு தொடர்புடைய முக்கிய தொழில் வாண்மை பெறுமானங்கள்
பெற வேண்டும் அதாவது தகவலை பெற்றுக்கொள்ள வேண்டும் அது
சரியாக இருக்கின்றதா என்பதனை உரிதிப்படுதிக்கொள்ள வேண்டும்
உண்மையை நேர்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

தனியாகவும் நடுநிலமையாகவும் செயற்படுதல் வேண்டும் குறிப்பிட்ட
சம்பவத்தின் சகல பக்கங்களையும் கண்டறிய வேண்டும் எமது
சம்பவங்களுடன் தொடர்புடைய விடயங்களை திரட்டுவதற்கு
நேர்மையான வழிகளை பின்பற்ற வேண்டும் பிழைகளை திருத்த
வேண்டும் வதந்திகளை வெளியிடாமல் இருக்க வேண்டும்
ஆகக்குறைந்தது இரண்டு மூலங்களிலாவது தகவலை பெற்று வழங்குதல்
வேண்டும் இரகசியமாக வழங்கப்பட்ட தகவலை மதித்தல் வேண்டும்
என்பன தொழில் வாண்மை பெறுமானங்களில் அடங்கும்.

சமூகத்தின் முக்கியமான பிரச்சனைகளை ஊடகங்கள் மூலமாக
வெளிப்படுத்த வேண்டும் மேலும் ஊடகங்கள் மூலமாக அவர்களது
குரல்கள் ஒலிக்கபட வேண்டும் சமூகத்தின் மதிப்பு பொறுமை புரிந்துணர்வு
போன்றனவும் அவசியமாகவும் சமூகத்தின் பல்லினத்தன்மை வேற்றுமைகள்
மனித உரிமைகள் போன்ற கொள்கைகளை மதித்து செய்திகளை வெளியிட
வேண்டும் ஊடகவியலாளர்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுத்த
வேண்டும் சமூகத்தில் மக்களது பிரச்சனைகளை அவர்கள் இடத்திற்கே
சென்று கேட்டு தகவல்களை வழங்க வேண்டும் ஊடகவியலாளர் சமூகத்தின்
கண்களாக மதிக்கபடுகின்றனர் இதனாலேயே ஆகும்.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.



ஊடக சுதந்திரத்தையும், தகவல் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் நலிவுறச்செய்யும் வகையில் பல அரசாங்கங்கள் செயற்பட்டுவருகின்றன. உலகத்தில் இடம்பெறும் அரசியல், நிகழ்வுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு.

ஊடகச்செயற்பாட்டை நலிவுறச்செய்யும் முயற்சிகள் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் படுகொலைகள் போன்றவற்றுக்கு முகம்கொடுக்கவேண்டி உள்ளது.

ஊடகவியல்




ஊடகவியல் (Journalism) அல்லது இதழியல் என்பது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்காகச் செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய துறை ஆகும். முன்னர் இத்துறை அச்சு ஊடகங்களான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே குறித்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மின்னணு ஊடகங்களையும் இது உள்ளடக்கியது. எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுகளையும், எண்ணங்களையும், பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையாக தகவல்களைப் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதனால் மக்கள், ஊள்ளூர், மாநில, தேசிய மற்றும் அனைத்துலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. ஊடகவியல்; அரசு, பொதுத்துறை அலுவலர்கள், நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், ஊடகவியல் நிறுவனங்கள், சமூக அதிகாரங்களைக் கொண்டிருப்போர் போன்றோரின் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதுடன்; நடப்பு நிகழ்வுகள் குறித்த தமது கருத்துக்களையும் வெளியிடுவதுண்டு.

தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவகல்ளைச் சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர் இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு. - wikipedia